தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2023-05-21 11:54 GMT

கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் பகுதியில் இருந்து சடையப்ப சுவாமி கோவில் வழியாக புங்கோடை செல்லும் தார் சாலை நெடுகிலும் மின் கம்பம் நடப்பட்டு அந்த கம்பத்தின் வழியாக மின்கம்பிகள் செல்கிறது. இந்த கம்பியின் வழியாக 24 மணி நேரமும் மின்சாரம் செல்கிறது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி கடும் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த வழியாக செல்லும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் பெரிய வாகனங்கள் மின்கம்பியில் மோதி பெரும் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்