மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா உடன்பட்டி செல்லும் வழியில் விவசாய நிலத்தில் உள்ள மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. இதனால் விவசாயிகள் இந்த வழியே செல்லும் போது பயத்துடனே சென்றுவருகின்றனர். எனவே விபரீதங்கள் எதுவும் நிகழ்வதற்குள் இந்த மின்கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.