மின்விளக்கு வசதி வேண்டும்

Update: 2023-05-14 15:13 GMT

தேனி அருகே வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. விழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் தேனி-கம்பம் சாலையில் முத்துதேவன்பட்டியில் இருந்து உப்புக்கோட்டை விலக்கு வரை சாலையோரத்தில் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவில் வீட்டைவிட்டு வெளியே வரவே பெண்கள் அச்சப்படுகின்றனர். எனவே மின்விளக்கு வசதியை செய்து கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்