பாதசாரிகள் அவதி

Update: 2023-05-10 09:23 GMT

குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட பள்ளி ரோடு செல்லும் சாலையோரத்தில் ஒரு மின்கம்பம் சேதமடைந்து காணப்பட்டது. இதையடுத்து சேதமடைந்த மின்கம்பம் இருந்த இடத்தில் புதிய மின்கம்பத்தை நட்டனர். ஆனால், சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி அதே இடத்தில் போட்டு விட்டு சென்றுள்ளனர். இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் அவதிக்குள்ளாவதுடன் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை அப்புறப்படுத்துவார்களா?.

-பாஷீர், குளச்சல்.

மேலும் செய்திகள்