முறையாக பராமரிக்க வேண்டும்

Update: 2023-05-10 09:18 GMT

 புத்தளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட உசரவிளையில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்கு பழுதடைந்து காணப்படுகிறது. சாலையின் வளைவான பகுதி என்பதால் இரவு நேரம் இருள்சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இருட்டை பயன்படுத்தி சமூக விரோத சம்பவங்களும் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. எனவே, பழுதடைந்த விளக்கை அகற்றி விட்டு புதிய விளக்கை பொருத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிருஷ்ணகுமார், உசரவிளை.

மேலும் செய்திகள்