உயர் மின் கோபுர விளக்கு சரி செய்யப்படுமா?

Update: 2023-04-30 16:49 GMT
திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே உள்ள கோப்பு உய்யகொண்டான் வாய்க்கால் பாலத்தின் அருகே பொதுமக்களின் நலன்கருதி கடந்த சில ஆண்டுகளுக்கு உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு உயர் மின் கோபுர விளக்கு பழுதான நிலையில் விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்ந்தப்பட்ட அதிகாரிகள் உயர் கோபுர மின் விளக்கை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்