புதிய மின்கம்பம் நட்டும் பலனில்லை

Update: 2023-04-23 11:53 GMT

கரூர் மாவட்டம், நடையனூரில் இருந்து பேச்சிப்பாறை நவீன மயானத்திற்கு செல்லும் சாலையில் கவுண்டன்புதூர் பிரிவு சாலை எதிரே மின்கம்பம் நடப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் இந்த மின்கம்பம் சிதிலமடைந்து கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து கீழே விழுந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மிகவும் சிதிலமடைந்த அந்த கம்பத்தின் அருகே புதிய மின்கம்பம் நடப்பட்டது. ஆனால் இதுவரை சிதிலமடைந்த மின் கம்பத்திலிருந்து புதிய மின் கம்பத்திற்கு மின் கம்பிகளை மாற்றி அமைக்கவில்லை. தொடர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ள மின்கம்பத்திலேயே மின் கம்பிகள் உள்ளது. அதில் 24 மணி நேரமும் மின்சாரம் செல்கிறது. எந்த நேரமும் மின் கம்பம் முறிந்து தார் சாலையில் விழும் சூழ்நிலையில் உள்ளது. இதனால் பெரும் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்