ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-04-19 12:53 GMT

கரூர் மாவட்டம், முத்தனூரில் இருந்து அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டுக்கு செல்லும் சாலையின் ஓரத்தில் மின்கம்பம் நடப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இந்த மின்கம்பத்தில் உள்ள மின் கம்பிகள் வழியாக 24 மணி நேரமும் மின்வினியோகம் செல்கிறது. இந்நிலையில் மின் கம்பம் நடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக மின்கம்பத்தில் உள்ள கான்கிரீட்டுகள் கீழே விழுந்து வருகிறது. இதன் காரணமாக மின்கம்பத்தில் உள்ள கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் எந்த நேரத்திலும் மின் கம்பம் முறிந்து தார் சாலையில் விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த மின் கம்பத்தை மாற்றி விபத்தினை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்