மின்மாற்றியில் படரும் செடி-கொடிகள்

Update: 2023-04-09 13:16 GMT

கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி கணேசபுரம் கிழக்கு பகுதியில் வசிக்கும் பொது மக்களின் குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்கவும், குடிநீர் தொட்டிகளுக்கு மின் மோட்டார்களை இயக்கவும் அந்த பகுதியில் மின்மாற்றி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ள பகுதியில் செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. பச்சை செடிகள் இந்த மின்மாற்றியில் படர்ந்து மின் கம்பிகளை உரசும் நிலையில் உள்ளது. இதனால் அந்த செடி, கொடிகள் வழியாக மின்சாரம் பாய்ந்து அதை மிதிக்கும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஆபத்து ஏற்படக்கூடிய நிலை உள்ளது. மேலும் இந்த செடி, கொடிகளால் மின்மாற்றியில் பழுது ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்