தெருவிளக்கு அமைத்து தர கோரிக்கை

Update: 2023-04-05 13:16 GMT
கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம், நெய்தலூர் ஊராட்சி, பெரியப்பனையூர், அம்பேத்கர் நகரில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள தெருவிற்கு பல ஆண்டுகளாக தெருவிளக்கு வசதி இல்லாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் தெரு முழுவதும் இருட்டாக இருந்து வருகின்றது. குடி இருக்கும் வீடு அருகே வயல்வெளி என்பதால் விஷ ஜந்துகள் அடிக்கடி வந்து செல்கிறது. குழந்தைகள், முதியோர்கள் வசித்து வருவதால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகள் அமைத்து தர வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்