குறைந்த மின்னழுத்தத்தால் மின் சாதனங்கள் பழுது

Update: 2023-04-05 13:01 GMT

 திருச்சி விமான நிலையம் செம்பட்டு மின் நிலையத்திற்கு உட்பட்ட மருவூர் அரசிநகர், ஏர்.ஆர்.எஸ்.நகர், எஸ்.பி.ஐ.ஓ.ஏ. பள்ளிக்கூடபகுதிகளில் குறைந்த மின்னழுத்தத்தால் வீடுகளில் உள்ள பிரிட்ஜ், டி.வி., மிக்சி, மின் மோட்டார்கள் இயங்காமல் பழுதாகிவிடுகின்றன. குறைந்த மின் அழுத்தம் பற்றி இந்த பகுதி மக்கள் புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த பகுதியில் வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் அங்கு 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மின்மாற்றி உள்ளது. அதனால் தான் குறைந்த மின்னழுத்தத்தால் மின்சார சாதனங்கள் பழுதாகின்றன. அதனால் மருவூர் அரசிநகர் பகுதியில் கூடுதல் திறன் கொண்ட மின்மாற்றி அமைத்து இப்பகுதியில் உள்ள பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்