நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சேகல் கிராமத்தில் இருந்து மருங்கூர் சாலை உள்ளது.இந்த சாலையில் உள்ள மின்கம்பம் ஒன்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வீசிய கஜா புயலின் போது சேதமடைந்து சாய்ந்தது. இந்த நிலையில் மின்கம்பம் சுமார் 4 ஆண்டுகளுக்கு மேலாக சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாய்ந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும்.
பொதுமக்கள், சேகல்.