மின்கம்பம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-04-02 14:32 GMT

மயிலாடுதுறை மாவட்டம் கொழையூர் வடுகபாளையம் தெருவில் உள்ள வயல்வெளி பகுதிக்குள் மின்கம்பம் ஒன்று பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. மேலும், மின்கம்பமும் சாய்ந்த நிலையில் காட்சி அளிக்கிறது. இதன்காரணமாக வயல்வெளிக்கு வேலைக்கு செல்பவர்கள், விவசாயிகள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சேதடைந்து காணப்படும் மின்கம்பத்தை சீரமைத்து தர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.



மேலும் செய்திகள்