மின்கம்பம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-26 11:01 GMT

நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சி குறிச்சாங்கண்ணி குளக்கரையில் மின்கம்பம் ஒன்று பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விடக்கூடிய சூழல் நிலவுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்