உயர்கோபுரமின்விளக்கு ஒளிருமா?

Update: 2023-03-26 11:01 GMT

நாகை வட்டம் வடக்கு பொய்கைநல்லூர் நந்திநாதேஸ்வரசாமி கோவில் எதிரே உயர்கோபுர மின் விளக்கு உள்ளது. இது முறையான பராமரிப்பின்றி கடந்த சில மாதங்களாக சரிவர எரிவதில்லை. இதன்காரணமாக இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள், அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள உயர்கோபுரமின்விளக்கு மீண்டும் ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா?

படம் இல்லை


மேலும் செய்திகள்