எரியாத விளக்குகள்

Update: 2023-03-26 07:50 GMT

எரியாத விளக்குகள்

ராஜாக்கமங்கலம் சந்திப்பில் இருந்து இரணியல் செல்லும் சாலையில் கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ராஜாக்கமங்கலம் முதல் காக்காத்தோப்பு வரையிலான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் தெரு விளக்குகள் ஏரியவில்லை. இதனால் இந்த பகுதி இருளில் மூழ்கியிருப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த விளக்குகளை அகற்றி புதிய விளக்குகள் அமைத்து எரியவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாகராஜன், ராஜாக்கமங்கலம்.

மேலும் செய்திகள்