எரியாத தெருவிளக்குகள்

Update: 2023-03-22 12:56 GMT

நாமக்கல் - திருச்சி சாலை வகுரம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது மாருதிநகர் மற்றும் பொன்விழாநகர். இப்பகுதியில் அரசு அலுவலர் குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக 10-க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் பெண்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். விஷஜந்துக்களின் நடமாட்டமும் அதிகரித்து உள்ளது. எனவே எரியாத தெருவிளக்குகளை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்