புதிய மின்கம்பம் பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2023-03-15 14:59 GMT

புதுக்கோட்டை மாவட்டம், பழைய ஆதனக்கோட்டையில் நல்லமுத்தான் ஊரணிகரையில் சோத்துப்பாளை செல்லும் சாலை அருகே இருந்த பழுதடைந்த மின்கம்பத்தின் அருகே புதிய மின்கம்பம் நடப்பட்டுள்ளது. ஆனாலும் புதிய மின்கம்பம் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. எனவே பழுதடைந்த மின்கம்பத்தை உடனடியாக அகற்றி புதிதாக நடப்பட்ட மின்கம்பத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்