ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-03-12 14:02 GMT
திருச்சி மாவட்டம், அல்லூர் அக்ரஹாரம் பிள்ளையார் கோவில் அருகே காவிரி கரையில் ஒரு மின்கம்பம். உள்ளது. இந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இப்பகுதியில் உள்ள வீரப்பன் கோவில் திருவிழாவிற்கு மின்கம்பம் உள்ள இடத்தில் இருந்துதான் வான வேடிக்கையும் நடைபெறும். இதனை பக்தர்கள் கண்டு ரசிப்பர். எனேவ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் நட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்