'தினத்தந்தி' புகார்பெட்டி எதிரொலி; மின்கம்பம் மாற்றப்பட்டது

Update: 2023-03-12 10:32 GMT

நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சி பச்சாந்தோப்பில் மின்கம்பம் ஒன்று சேதமடைந்து காணப்பட்டது. இதன்காரணமாக அந்த வழியாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வந்தனர். இதுகுறித்து 'தினத்தந்தி' புகார்பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பத்தை நட்டுள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்