ஆபத்தான நிலையில் மின்கம்பம்

Update: 2022-07-20 15:09 GMT
விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் மிகவும் பலவீனமடைந்துள்ளது. எந்நேரத்திலும் உடைந்து விழும் நிலையில் அந்த மின்கம்பம் உள்ளதால் பஸ் நிலையத்திற்கு வரும் மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே ஏதேனும் விபத்து நிகழ்வதற்குள் எலும்புக்கூடு போல் காணப்படும் அந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிதாக மின்கம்பம் அமைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்