எரியாத தெருவிளக்குகள்

Update: 2023-03-05 12:10 GMT

கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையம் அருகே கட்டிப்பாளையத்தில் கடந்த 20 நாட்களாக 3 தெருவிளக்குகளும், காளியப்பா நகரில் உள்ள 3 தெருவிளக்குகளும் பழுதாகி எரியாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து உள்ளதால் இப்பகுதியில் உள்ள மக்கள் இரவு நேரத்தில் வெளியே நடமாட பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்