சேதமடைந்த மின்கம்பிகள்

Update: 2023-03-05 10:58 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா நெப்பத்தூர் ஊராட்சியில் கீழநெப்பத்தூர் –தென்னாம்பட்டினம் வழி கீழமூவர்க்கரை செல்லும் மின்கம்பிகள் சேதமடைந்த நிலையில் உள்ளது. பலத்த காற்று வீசும் போது அவ்வபோது மின்கம்பிகள் அறுந்து விழுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. இதன்காரணமாக அப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.மேலும்,சேதமடைந்த மின்கம்பிகளால் வாகன ஓட்டிகள் அந்த வழியாக அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பிகளை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்