இருளில் மூழ்கிய சாலை

Update: 2023-02-22 16:33 GMT

தர்மபுரி- கிருஷ்ணகிரி சாலையில் ராமாக்காள் ஏரி முதல் பழைய தர்மபுரி வரை உள்ள சாலையின் நடுவே தடுப்பு கம்பிகளில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின்விளக்குகள் இரவு நேரங்களில் சரியாக எரிவதில்லை. இதனால் இந்த பகுதி சாலை இரவு நேரங்களில் இருளில் மூழ்கி விடுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் இந்த பகுதியில் செல்லும் போது போதிய வெளிச்சமின்றி சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இரவு நேரங்களில் இந்த பகுதியில் மின் விளக்குகள் முழுமையாக எரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்