மின்விளக்கு வசதி வேண்டும்

Update: 2023-02-12 10:59 GMT

நாகை மாவட்டம் திருகன்னப்புரம் ஊராட்சி ராதாரம்பூர் கிராமத்தில் சாலையோரத்தில் மின்விளக்குகள் இல்லை. இதன்காரணமாக இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், வெளிச்சம் இல்லாத காரணத்தினால் நடந்து செல்லும் பொதுமக்கள் விஷப்பூச்சிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் மின்விளக்கு வசதி செய்து தர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்