உயர் கோபுர மின் விளக்கு வேண்டும்

Update: 2022-07-19 17:05 GMT

பெரம்பலூரில் ரோவர் சாலை எளம்பலூர் சாலையுடன் சந்திக்கும் இடத்தில் இரவு நேரத்தில் வெளிச்சம் இன்றி உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இரு திசைகளிலும் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோரும், கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்களில் செல்வோரும் போதிய வெளிச்சம் இன்றி எதிரே வரும் வாகனங்களை கணிக்க முடியாமல் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே இப்பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்