சாய்ந்த நிலையில் மின்கம்பம்

Update: 2023-02-05 12:21 GMT

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் மின்கம்பம் ஒன்று பராமரிப்பின்றி காணப்படுகிறது. இந்த மின்கம்பம் சாய்ந்த நிலையில் நிற்கிறது. இதன்காரணமாக மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் நிலை உள்ளது. இதன்காரணமாக மின்கம்பம் உள்ள பகுதியை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.



மேலும் செய்திகள்