மரக்கிளைகள் சூழ்ந்த மின்விளக்கு

Update: 2023-02-05 10:11 GMT

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் செல்லும் சாலையில் உள்ள தங்கப்ப நாடார் நந்தவனம் தெருவில் உள்ள மின்கம்பத்தில் மரக்கிளைகள் சூழ்ந்துள்ளதால் இரவு நேரங்களில் மின்விளக்கு வெளிச்சம் சாலையில் தெரிவதில்லை. இதனால் அந்தப் பகுதியில் இருள் சூழ்ந்து பொதுமக்கள் இரவில் நடக்க சிரமப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்