ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-02-01 10:51 GMT

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம் நங்கவரம் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள ஒரு மின்கம்பம் சிதிலமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இந்த வழியாக தினமும் கனரக வாகனங்கள், அரசு பஸ்கள், பள்ளி வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்