இருள் சூழ்ந்த பகுதி

Update: 2023-02-01 10:49 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பழைய தாலுகா அலுவலகம் முன்பும், குன்னம் போலீஸ் நிலையம் முன்பும் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டு இருந்தது. அந்த மின் விளக்குகள் சரிவர எரியாததால் குன்னம் ஊராட்சி நிர்வாகம் உயர் கோபுரத்திலிருந்து மின் விளக்குகளை அகற்றியது. ஆனால் நீண்ட நாட்களாக மின் விளக்குகளை சரி செய்யாததால் அப்பகுதி இருட்டாக உள்ளது. எனவே உடனடியாக குன்னம் ஊராட்சி நிர்வாகம் மின் விளக்கை சரி செய்து பொருத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்