ஆபத்தான நிலையில் மின்கம்பம்

Update: 2023-01-29 15:08 GMT

நாகை மாவட்டம் திருமருகலை அடுத்த புத்தகரம்-ஆதலையூர் சாலை வளைவு பகுதியில் மின்கம்பம் ஒன்று பராமரிப்பின்றி உள்ளது. மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் வலுவிழந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விடும் சூழல் நிலவுகிறது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.



மேலும் செய்திகள்