மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி பகுதியில் விக்ரமன் ஆற்றுப்பாலம் உள்ளது. இது கஞ்சனூர், சூரியனார் கோவில் திருமணஞ்சேரி கோவிலுக்கு செல்வதற்கான முக்கிய பாதையாக விளங்குகிறது. இந்த மேம்பாலத்தில் முறையான மின்விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக வாகன ஓட்டிகள், பக்தர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேம்பாலத்தில் மின்விளக்கு வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?