எலும்பு கூடான மின்கம்பங்கள்

Update: 2023-01-25 14:16 GMT

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கூடலூர் ஊராட்சி நாட்டார்கோவில்பட்டி மெயின் ரோட்டின் அருகே அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் 5 மின்கம்பங்கள் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எலும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பங்கள் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்