விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஹவுசிங்போர்டு பகுதியில் பல்வேறு அரசு அலுவலகங்கள், குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள பல மின் கம்பங்கள் சரிந்து விழுந்த நிலையில் அவை அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது. எனவே சரிந்து கிடக்கும் மின்கம்பங்களை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.