உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்

Update: 2023-01-22 11:20 GMT
புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே உள்ள அண்ணாநகர் தெற்குப்புறம் தெற்கு தொண்டைமான்ஊரணி செல்லும் சாலையின் அருகே மின்கம்பம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து உடைந்த நிலையில் காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்