தெருவிளக்குகள் ஒளிருமா?

Update: 2023-01-22 10:25 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் கோபாலசமுத்திரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதன்காரணமாக இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள தெருவிளக்குகள் ஒளிர்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.


மேலும் செய்திகள்