புகாருக்கு உடனடி தீர்வு; புதிய மின்கம்பம் அமைப்பு

Update: 2023-01-18 13:41 GMT
திருச்செந்தூர் அருகே சோனகன்விளை யோகீசுவரர் தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து, குறுகலான பாதையில் உள்ளதால் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக மகாராஜன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு, மாற்று இடத்தில் புதிய மின்கம்பம் நட்டுள்ளனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்