எலும்பு கூடான மின்கம்பங்கள்

Update: 2023-01-11 11:52 GMT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அண்ணாமலை அவென்யூ குடியிருப்பு பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கும் வகையில் இப்பகுதியில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 2 மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து எலும்புக்கூடுபோல் காட்சியளிக்கிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின் போது இந்த மின் கம்பங்கள் முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் சேதமடைய அதிக வாய்ப்புள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரதுறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்