ஆபத்தான நிலையில் மின்கம்பம்

Update: 2023-01-01 15:22 GMT

தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டி மேலத்தெருவில் உள்ள வயல்வெளி பகுதியில் மின்கம்பம் ஒன்று பராமரிப்பின்றி காணப்படுகிறது. குறிப்பாக மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதன்காரணமாக வலுவிழந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் சூழல் நிலவுகிறது. இதனால் வயல்வெளிக்கு வரும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டு விடுமோ? என அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.



மேலும் செய்திகள்