மின்கம்பத்தில் செடி

Update: 2023-01-01 18:45 GMT

அந்தியூர் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தெரு விளக்கு ஒன்று உள்ளது. இந்த மின் கம்பத்தை சுற்றிலும் செடி, கொடிகள் படர்ந்து உள்ளது. இதனால் அதில் உள்ள மின் விளக்கின் வெளிச்சம் ெதருவில் விழுவதில்லை. இதன்காரணமாக வீதியில் பொதுமக்கள் இரவு நேரங்களில் நடமாட முடியாமல் சிரமப்படுகிறார்கள். மேலும் மின் கம்பத்தில் வளர்ந்த செடி, கொடிகளால் மின் விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே மின்கம்பத்தில் படர்ந்து வளர்ந்து உள்ள செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்