எரியாத மின்விளக்குகள்

Update: 2022-12-25 18:10 GMT
திட்டக்குடி தாலுகா முருகன்குடி கிராமத்தில் வெள்ளாற்றை கடந்த செல்லும் வகையில் பாலம் அமைந்துள்ளது. அந்த பாலத்தில் உள்ள மின்விளக்குகள் பழுதடைந்த காரணத்தால் எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி முழுவதும் இருள்சூழ்ந்து காணப்படுவதால், திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. மேலும் மதுபிரியர்கள் மது குடித்து விட்டு அட்டகாசம் செய்து வருகின்றனர். எனவே மின்விளக்குகளை சீரமைக்க மின்வாரிய அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்