தொட்டுவிடும் உயரத்தில் மின்கம்பி

Update: 2022-12-25 12:21 GMT
கரூர் மாவட்டம், மணவாடி ஊராட்சி கல்லுமடை பஸ் நிறுத்தத்தில் இருந்து சிறிது தொலைவில் அய்யம்பாளையம் காலனி பகுதி அருகே 2 மின் கம்பங்களுக்கு இடையே செல்லும் மின்கம்பியானது மிகவும் தாழ்வாக தொட்டுவிடும் உயரத்தில் செல்கிறது. கரூர் வெள்ளியணை சாலை ஓரத்தில் செல்லும் இந்த மின் கம்பியில் வாகனங்கள் கவனக்குறைவால் மோதினால் உயிரிழப்பு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது. எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு அந்த பகுதியில் புதிதாக மின் கம்பம் ஒன்று நட்டு மின் கம்பியின் உயரத்தை அதிகப்படுத்த வேண்டும். கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்