புதிய மின்கம்பம் வேண்டும்

Update: 2022-12-25 10:54 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே முத்துப்பேட்டை சாலையும், ராஜாமடம் வாய்க்காலும் சந்திக்கும் இடத்தில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக மின்கம்பத்தின்மேல்பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதன்காரணமாக மின்கம்பம் உள்ள பகுதியை பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்பம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் வைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



மேலும் செய்திகள்