புதிய மின்பெட்டி அமைப்பு

Update: 2022-12-21 13:03 GMT
தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் திருமலையப்பபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் மின்பெட்டி மூடி இல்லாமல் திறந்தே கிடப்பதாக திருக்குமரன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து மின்கம்பத்தில் மூடியுடன் புதிய மின்பெட்டி அமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்