தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2022-12-14 11:49 GMT
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் ஒன்றியம், முத்தரசநல்லூர் கிராமம் முத்தமிழ் புற தெருவில் கடந்த 3 மாதமாக தெரு விளக்குகள் எரியவில்லை. இதனால் இப்பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதினால் இப்பகுதியில் பெண்கள், குழந்தைகள் சாலையில் நடமாட பெரிதும் அச்சப்படுகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து எரியாத மின்விளக்குகளை சரிசெய்து எரியவைத்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்