எரியாத தெருவிளக்குகள்

Update: 2022-12-14 11:48 GMT
திருச்சி மாவட்டம், துவாக்குடியில் உள்ள டாக்டர் கலைஞர் சாலையில் இரவு நேரத்தில் தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் இருள்சூழ்ந்து காணப்படுவதினால் இப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்