எரியாத தெருவிளக்குகள்

Update: 2022-12-11 13:17 GMT

நாமக்கல் நகராட்சியை ஒட்டி உள்ளது வகுரம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட மாருதிநகர், பொன்விழாநகர் பகுதியில் அரசு அலுவலர் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு பகுதிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை. தற்போது மழைக்காலம் என்பதால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் எரியாத தெருவிளக்குகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்