எரியாத தெருவிளக்குகள்

Update: 2022-12-11 12:21 GMT

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் ஒன்றியம், முத்தரசநல்லூர் கிராமம் முத்தமிழ் புற தெருவில் கடந்த 3 மாதமாக தெரு விளக்குகள் எரியவில்லை. இதனால் இப்பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதினால் இப்பகுதியில் பெண்கள், குழந்தைகள் சாலையில் நடமாட பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்