சேதமடைந்த மின்கம்பம்

Update: 2022-12-04 13:50 GMT

நாகப்பட்டினம் மாவட்டம் தேத்தாக்குடி தெற்கு தோப்புத்துறை பகுதியில் உள்ள மின்கம்பம் உரிய பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. சிமெண்டு காரைகள் பெயர்ந்து அதில் உள்ள கம்பிகள் வெளியே தெரியும் வகையில் உள்ளது. சிறு காற்று வீசினாலும், சாயும் வகையில் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்வோர் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை சீரமைக்கவேண்டும்.

மேலும் செய்திகள்