எரியாத தெருவிளக்குகள்

Update: 2022-11-30 11:45 GMT

திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் செக்போஸ்ட் அருகில்  கொள்ளிடம் புதுப்பாலத்தில் இரவு நேரங்களில் சாலையின் இருபுறமும் உள்ள மின்விளக்குகளும், பாலத்தின் மேல்கூரையில் உள்ள மின்விளக்குகளும் சரிவர எரிவதில்லை. இதனால் அவ்வழியே சமயபுரத்திற்கு பாதயாத்திரையாகவும், வாகனங்களில் செல்பவர்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்து விடுமோ என்ற அச்சத்துடனும் செல்ல வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்